02.01.2021 சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக சேலம் பிளாகிங் (Salem Plogging) பணியில்

சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில்,  நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (Salem Plogging) குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

02.01.2021 சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக சேலம் பிளாகிங் (Salem Plogging) பணியில்
02.01.2021 சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக சேலம் பிளாகிங் (Salem Plogging) பணியில்

சேலம் பிளாகிங் (Salem Plogging) பணியில்
பொதுமக்கள்ஆர்வமுடன் ஈடுபட வேண்டும் 
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள்.  


சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில்,  நடைபயிற்சியின் போது மாநகரப் பகுதிகளில் நடைபாதை குப்பைகளை சேகரித்து அகற்றும் சேலம் பிளாகிங் (Salem Plogging) குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

இன்று 02.01.2021  சூரமங்கலம் மண்டலத்தில் அபிராமி கார்டன், அண்ணாநகர்- மாமாங்கம், முல்லை நகர்; அஸ்தம்பட்டி மண்டலத்தில் ஹவுசிங்போர்டு அய்யந்திருமாளிகை, திருநகர் மெயின் ரோடு, பச்சுடையார் காடு, தெற்கு அழகாபுரம்; அம்மாபேட்டை மண்டலத்தில் தியாகி நடேசன் தேரு, மாரியப்பன் நகர், தாதம்பட்டி; கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வாய்க்கால் கரை, மாநகர் ரோடு, புட்டாமிசின் தெரு  ஆகிய  இடங்களில் சேலம் பிளாகிங்  நடைபெற்றது. 

இப்பணியில், அபிராமி கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம், காமராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஸ்மார்ட் சேலம் குடியிருப்போர் நலச்சங்கம், விநாயகா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மாரியப்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், செல்வம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், சேலம் இளைஞர்கள் குழு, சேலம் குகை ரோட்டராக்ட் சங்கத்தினர் உட்பட  550 தன்னார்வலர்கள் மூலம் 615 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேரிக்கப்பட்டுள்ளது.      

கொண்டலாம்பட்டி மண்டலம் ரங்கபுரம் பகுதியில் நடைபெற்ற சேலம் பிளாகிங் பணியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

குப்பையில்லா மாநகரமாக சேலம் மாநகராட்சியை திகழச்செய்ய மக்களிடையே விழிப்புணர்வூட்டும் வகையில் சனிக்கிழமை தோறும் காலையில் நடைபெறும்  சேலம் பிளாகிங் பணியில் பொதுமக்கள் தங்களை முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுகாதாரமான, தூய்மையான பகுதியாக திகழச்செய்ய வேண்டும் என ஆணையாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.